நலத்திட்ட உதவிகள் வழங்கிய நகராட்சி தலைவர்

குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் ஆறு மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கினார்.

பள்ளிபாளையம் ரோடு கௌரி தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் இருக்கை நிழற்கூடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை, 1வது வார்டு எடப்பாடி மெயின் ரோடு பேருந்து நிறுத்தத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

வார்டு எண் 3 ,கிழக்கு காவிரி நகர் பகுதியில் பொதுமக்களிடையே தெருவிளக்கு மற்றும் சாக்கடை வசதி சம்பந்தமான குறைகேட்பு கூட்டம் நடந்தது.வார்டு எண் 11 சத்யாபுரி பகுதியில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை பெறுவதற்கு பதிவு செய்யும் முகாம் நடந்தது. 33 வது வார்டைச் சேர்ந்த சிறுநீரக பாதிப்பு அடைந்த ஹரிணி என்ற ஆறு மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு நிதி உதவி தி.மு.க நிர்வாகிகள் முன்னிலையில் நிதி வழங்கப்பட்டது.

குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க வார்டு செயலாளர்கள் கூட்டம் நடந்ததுடன், வார்டு செயலாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்பட்டது. ராஜ்குமார் என்ற இளைஞருக்கு மருத்துவ உதவி தொகை வழங்கப்பட்டது. கவுன்சிலர்கள் வேல்முருகன், ஜேம்ஸ், நகர பொறுப்பு குழு உறுப்பினர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story