குமாரபாளையம் : கள் இறக்கிய இருவர் கைது

குமாரபாளையம் : கள் இறக்கிய இருவர் கைது

 கள் 

குமாரபாளையம் அருகே கள் இறக்கி விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் வட்டமலை பகுதியில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ. கெங்காதரன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பகுதி ஒன்றில் மரத்திலிருந்து கள் இறக்கி, விற்பனைக்காக இருவர் வைத்திருந்தனர். நேரில் சென்ற போலீசார், இருவரிடமும் தலா ஒரு லிட்டர் கள் பறிமுதல் செய்து, வட்டமலையை சேர்ந்த செல்வராஜ், 41, தேவூர், புள்ளாக்கவுண்டம்பட்டியை சேர்ந்த சந்திரன், 45, ஆகிய இருவரை கைது செய்தனர்.

Tags

Next Story