காது கேளோதோர் உலக தடகள போட்டியில் குமரி வீரர்கள் - ஆட்சியர் பாராட்டு

காது கேளோதோர் உலக தடகள போட்டியில்  குமரி வீரர்கள் - ஆட்சியர் பாராட்டு

ஆட்சியருடன் சுதன்,சமீகா பர்வின்,வினித்

தைவானில் நடைபெறும் காதுகேளோதோருக்கான உலக தடகள போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள குமரி மாவட்ட வீரர்களை ஆட்சியர் ஸ்ரீதர் பாராட்டினார்.

காதுகேளோதோருக்கான உலக தடகள போட்டியில் பங்கேற்பதற்கான தேசிய அளவிலான தெரிவுப் போட்டிகள் ஏப்ரல் 11 முதல் 22 வரை மத்திய பிரதேசம் குவாலியரில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணிக்காக கன்னியாகுமரி காதுகேளோதோர் விளையாட்டு வீரர்களான .சுதன் மும்முறை தாண்டுதல் போட்டியிலும்,M. சமீகா பர்வின் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல், M. வினித் 200 மீ, 400மீ பிரிவில் பங்கேற்றனர்.

கலந்து கொண்ட இம்மூவரும் 18.07.2024 முதல் 23.07.2024 வரை தைவானில் நடைபெறும் காதுகேளோதோருக்கான உலக தடகள போட்டிக்கு தகுதி பெற்று இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளனர் இந்த வீரர்கள் நேற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அலுவலர் ராஜேஷ் கலந்து கொண்டார்.

Tags

Read MoreRead Less
Next Story