குமரி : வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர், எஸ்பி ஆய்வு

குமரி : வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர், எஸ்பி ஆய்வு

ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் எஸ்பி சுந்தரவதனம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் சட்டமன்றத் தொகுதி வாரியாக எண்ணப்படுகிறது. இதை அடுத்து ஒரு அறைக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குகள் தனியாக மற்றொரு அறையில் எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காகவும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இந்த நிலையில் கலெக்டர் ஸ்ரீதர் இன்று காலை வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் எஸ் பி சுந்தர வதனம் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags

Next Story