குமரி மாவட்ட அதிமுக கூட்டம் 

குமரி மாவட்ட அதிமுக கூட்டம் 
அதிமுக கூட்டம்
குமரி மாவட்ட அதிமுக கூட்டம் தக்கலையில் நடந்தது.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக (ஓ பி எஸ்) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தக்கலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி. டி.செல்லப்பன் கலந்து கொண்டு கழகப் பணிகளை விரைந்து செயல்படுத்தவும், விடுபட்ட ஒன்றிய, நகர ,பேரூர் நிர்வாகிகள் பட்டியலை பூர்த்தி செய்து தரும்படியும் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார். வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதை பற்றியும் ஆலோசனை வழங்கினார். மேலும் ஜெயலலிதா ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட கழகத்தின் சார்பில் தக்கலை பேருந்து நிலையம் அருகே ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், மாநில இலக்கிய அணி இணைச் செயலாளர் வீர வேணா டன்ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கமணி, மாவட்ட இணை செயலாளர் சரளா ஏசுதாஸ், மாவட்ட பொருளாளர் பெல்மோர் ராபர்ட் , மாவட்டக் துணைச் செயலாளர் உஷா, தக்கலை மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சிவகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story