சவுதி அரேபியாவில் குமரி மீனவர் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் குமரி மீனவர் உயிரிழப்பு

மீனவர் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் குமரி மீனவர் உயிரிழந்ததை அடுத்து அவரது உடலை மீட்க கலெக்டரிடம் புகார்
கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குனர் டன்ஸ்டன் தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த ஒரு மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பள்ளம் ஊரைச் சேர்ந்தவர் ஜான் கென்னடி மகன் சகாய சுபின் (26) என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சவுதி அரேபியா நாட்டின் டெரின் என்னும் இடத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி கடலில் தொழில் செய்து கொண்டிருந்த போது இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலைக்குள்ளாகி உள்ளனர். இறந்த அவரது உடலை உடனடியாக மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags

Next Story