குமரி : பிரிந்து வாழும் மனைவியை காரில் இழுந்து சென்ற கணவன்

குமரி : பிரிந்து வாழும் மனைவியை காரில் இழுந்து சென்ற கணவன்
ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெறும் அபிஷா
பதறவைக்கும்  சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு 
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் மகள் அபிஷா. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு முதலார் பகுதியை சேர்ந்த ஓவிய கலைஞரான பெர்லின் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். தற்போது ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அபிஷா தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார். தற்போது பி.எட் பட்டபடிப்பு படித்து வரும் அபிஷா தினமும் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றுவருவது வழக்கம். நேற்று மாலை கல்லூரியிலிருந்து அபிஷா வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அருவிக்கரை பாலம் பகுதியில் வைத்து கணவர் பெர்லின் காரில் வந்து வழிமறித்து, அபிஷாவை தாக்கிவிட்டு அவரது கையை பிடித்து தரதரவென இழுத்தபடியே காரை எடுத்து சென்றுள்ளார். இதையடுத்து அப்பகுதியிலிருந்த இளைஞர்கள் காரை துரத்தவே, அபிஷாவை விட்டுள்ளார். அப்பகுதியினர் அபிஷாவை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவட்டார் காவல்துறையினர் வழக்குபதிவு செர்து, தலைமறைவான பெர்லினை தேடிவருகின்றனர்.

Tags

Next Story