கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில்  கும்பாபிேஷகம்

கும்பாபிஷேக பணிகள் 

சின்னசேலம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நாளை நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சின்னசேலம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நாளை 21ம் தேதி நடக்கிறது.விழாவையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு வேதபாராயணம், தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம், லஷ்மி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. பின் சக்தி விநாயகர் கோவிலில் இருந்து சக்தி அழைத்தல் வைபவம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை, வேதிகார்ச்சனை, மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, தம்பதி பூஜை, சோடஷ உபச்சார உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடக்கிறது. இதனையடுத்து நாளை காலை 11:30 மணிக்கு வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆர்ய வைசிய சமூகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story