ஐக்கிய விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா!

ஐக்கிய விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான காயாமொழி ஐக்கிய விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான காயாமொழி ஐக்கிய விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான காயாமொழி ஐக்கிய விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை முதல் கால யாகசாலை பூஜையும், மாலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், புதன்கிழமை காலை 3ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. காலை 9.15 மணியளவில் பூஜையில் வைக்கப்பட்ட கும்பம் நீா் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு, விமான கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமி ஐக்கிய விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக், அறங்காவலா் வி.செந்தில் முருகன் கண்காணிப்பாளா்கள் ராமமூா்த்தி, அஜித் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மதியம் காயாமொழி ஆதித்த நாடாா்கள் மகா சபை சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி சப்பர வீதியுலா நடைபெற்றது.

Tags

Next Story