முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

அறந்தாங்கி அருகே வடக்கு மேல் குடி முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.
அறந்தாங்கி அருகே வடக்கு மேல் குடியில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் பல்வேறு புனித நதிகளில் இருந்து எடுத்து வர வைக்கப்பட்ட புனித நீர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டு பின்னர் மேளதாள இசைகள் முழங்க கோவிலை சுற்றி எடுத்து வர வைக்கப்பட்டு ராஜ கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story