அம்மா பட்டியில் அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா !

அம்மா பட்டியில் அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா !

கும்பாபிஷேக விழா

அம்மா பட்டியில் அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அம்மா பட்டியில் அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, தோட்டக்குறிச்சி கிராமத்தில் உள்ள அம்மாபட்டி அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலயம் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று அதிகாலையில் விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம்,ஸ்பர்சாகுதி, மங்கள மகாபூர்ணாகுதி, தீபாதாரணை, யாத்ராதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற பிறகு அருள் சக்தி கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோவில் கோபுரத்திற்கு சென்று, கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிவாச்சாரியார்கள் வெகு சிறப்பாக நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, பிஜேபி கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், புகலூர் நகராட்சி தலைவர் குணசேகரன் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கும்பாபிஷேக விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story