திருவண்ணாமலையில் கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலையில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், பூசிமலைகுப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி ஆரணி வடக்கு ஒன்றியம், பூசிமலைகுப்பம், கிராமம்,அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு உறுப்பினர், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர்.S.இராமச்சந்திரன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். ஆரணி நகர கழக செயலாளர் A.அசோக் குமார்,ஆரணி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் E.ஜெயபிரகாஷ்,மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் PRG.சேகர், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தலைவர் C.குணசேகரன், விழா குழுவினர், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story