வேல்முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வேல்முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வேல்முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வேல்முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

இளையான்குடி அருகே பெரும்பச்சேரி கிராமத்தில் புதிதாக வேல்முருகன் கோவில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் முடிவு பெற்று கும்பாபிஷேகத்திற்காக நேற்று முன்தினம் முதல் யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி துவங்கி நடைபெற்று வந்தன. இன்று காலை யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று கோயிலை சுற்றி வலம் வந்து பின்னர் கோவில் கோபுரத்திற்கு கொண்டு சென்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து வேல்முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது‌. கும்பாபிஷேக விழாவில் பெரும்பச்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story