அபய வரத விஸ்வரூப ஆஞ்சநேய ஆலயத்தில் கும்பாபிஷேகம்

அபய வரத விஸ்வரூப ஆஞ்சநேய ஆலயத்தில்  கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் 

தொழுதாவூர் அபய வரத விஸ்வரூப ஆஞ்சநேய ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த திருவலாங்காடு அருகே தொழுதாவூர் கிராமத்தில் திருக்கோயில் வளாகத்தில்12 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் அருள்முருகன் தலைமையில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவையொட்டி திருக்கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு நித்திய ஹோம குண்ட பூஜைகள் தொடர்ந்து இன்று காலை மேளதாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்ற கோபுர கலசத்திற்கு மற்றும் ஆஞ்சநேயர் திருவுருவ சிலைக்கு மஹா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் திருத்தணி திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags

Next Story