மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழா 

வாசுதேவநல்லூா் அருகே மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகேயுள்ள மீனாட்சிபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் அஷ்டந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, மகா கணபதி, ,ஸ்ரீ நாகம்மன், ஸ்ரீ மாரியம்மன், பதினெட்டாம்படி கருப்பசாமி, பைரவா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், சோகோ மென்பொருள் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதா் வேம்பு, பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளா்ச்சி பிரிவு மாநில துணைத் தலைவா் ஆனந்தன் ஆகியோா் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்திற்கான புனிதநீரை எடுத்துச் சென்றனா். பாஜக நிா்வாகிகள் ஜெயகோதண்டராமன், ராம்குமாா், சண்முகராஜ், கந்தசாமி, கிருஷ்ணசாமி, சங்கா்ஜி , சுப்பிரமணியன் உள்ளிட்ட திரளானோா் இதில் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை, அழகா், மூா்த்தி, செந்தூா்பாண்டியன், ராஜ், பாலகிருஷ்ணன், மகேந்திரபூபதி மற்றும் ஊா் நாட்டாண்மைகள் செய்திருந்தனா்.

Tags

Next Story