அள்ளாலபுரம் புடவைக்காரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

அள்ளாலபுரம் புடவைக்காரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

நாமக்கல் மாவட்டம், அள்ளாலபுரம் புடவைக்காரியம்மன் கோவிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது.

எலச்சிபாளையம் ஒன்றியம், பொம்மம்பட்டி கிராமம், அள்ளாலபுரத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் விநாயகர், புடவைக்காரியம்மன், வீரகாரன், எல்லம்மாள், லிங்கம்மாள், கன்னிமார் சுவாமிகள் கோவிலில் கும்பாபிசேகவிழா நடக்க இருப்பதையொட்டி,காலை 6மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா ஆரம்பமாகிறது. தொடர்ந்து, தீர்த்தம் எடுத்து வருதல், புன்யாகம், வாஸ்துபூஜை, யாகசாலை பிரவேசம், வேதிகார்சனை, முதல்காலம் நிறைவு உள்ளிட்ட நிகழ்சிகள் நடக்கின்றது.

காலை 5மணிக்கு இரண்டாம்கால யாகபூஜை, விநாயகர் வழிபாடு, திரவிய ஹோமம் நடைபெறும். தொடர்ந்து காலை 7;30மணிமுதல் 9மணிக்குள் விநாயகருக்கும், புடவைக்காரியம்மனுக்கும் மகாகும்பாபிசேகம் நடக்கும். 9மணிமுதல் 10மணிக்குள் காட்டுக்கோவில் வீரகாரன் சுவாமிக்கு மகாகும்பாபிசேகம் நடக்கும். தொடர்ந்து, பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறும். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags

Next Story