உளுந்தூர்பேட்டை ஆதிமூலநாதர் கோவில் கும்பாபிஷேகம்

உளுந்தூர்பேட்டை ஆதிமூலநாதர் கோவில் கும்பாபிஷேகம்

உளுந்துார்பேட்டை அடுத்த பு.கொணலவாடி உமையம்மை உடனமர் ஆதிமூலநாதர் சுவாமி, மாரியம்மன், துர்க்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 

உளுந்துார்பேட்டை அடுத்த பு.கொணலவாடி உமையம்மை உடனமர் ஆதிமூலநாதர் சுவாமி, மாரியம்மன், துர்க்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
உளுந்துார்பேட்டை அடுத்த பு.கொணலவாடி உமையம்மை உடனமர் ஆதிமூலநாதர் சுவாமி, மாரியம்மன், துர்க்கை அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 8:30 மணியளவில் 2ம் கால யாக பூஜைகள் துவங்கியது. புதிய விக்கிரங்களுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி, கன்னிகா பூஜை, பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணியளவில் விசேஷசந்தி, 3ம் கால யாக பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 7:00 மணியளவில் 4ம் கால யாக பூஜைகள் துவங்கியது. காலை 9:30 மணியளவில் யாத்திரை தானம், யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடந்தது. காலை 10:00 மணியளவில் உமையம்மை உடனமர் ஆதிமூலநாதர் சுவாமி, மாரியம்மன், துர்க்கை அம்மன் திருக்கோவில் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்

Tags

Next Story