கூரம்பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழா

கூரம்பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழா

ஸ்ரீ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

தர்மபுரி மாவட்டம், கூரம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் இண்டூர் பகுதியில் கூரம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கடந்த 48 நாட்கள் சிறப்பு மண்டல பூஜைகள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது இந்த நிலையில் இன்று மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது. இந்த விழாவிற்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ்பி வெங்கடேஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தார்.

இந்த விழாவில் கூரம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story