மேட்டூரில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மேட்டூரில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகம்
சேலம் மாவட்டம், மேட்டூரில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேட்டூர் அருகே புதுச்சாம்பள்ளியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா புதன் கிழமை நடைபெறுகிறது. இதனை ஒட்டி இன்று மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. அது சமயம் கும்பாபிஷேகத்திற்கு தேவையான புனித நீரை பம்பை வாத்தியம், மேளம் முழங்க மேட்டூர் காவிரியில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் புனித தீர்த்தம் எடுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை 6 மணி அளவில் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, ஹோமம், கலாஹர்ஷணம் முதல் காலஹோமம் தீபாராதனை உடன் தொடங்குகிறது. நாளை இரண்டாம் கால ஹோமமும் மூன்றாம் கால ஹோமமும் நடைபெறுகிறது.

Tags

Next Story