அச்சிறுப்பாக்கம் அருகே கோவில்களில் கும்பாபிஷேகம்

அச்சிறுப்பாக்கம் அருகே கோவில்களில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவிற்கு வந்த பக்தர்கள் 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிபேட்டை ஊராட்சி உட்பட்ட மதுரா புதுப்பேட்டை கிராமத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஐயப்ப சாமி,ஸ்ரீ கருப்பண்ண சாமி புதிய ஆலயங்கள் கட்டப்பட்டன. இதற்கான யாகசாலை கடந்த 21 -ஆம் தேதி விநாயகர் பூஜை உடன் தொடங்கியது அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.விழா காலை ஒன்பது முப்பது மணிக்கு யாகசாலை பூஜைகள் நிறைவேற்றி மகாதேவாதனைக்கு பின்னர் சிவாச்சாரியார்கள் கும்பங்களை சுமந்தபடி கோயிலை வலம் வந்து கோயில்களின் கோபுரத்தை வந்தடைந்தன.அதன் பின்னர்,கோயில் கோபுர கலசங்களுக்கு பூஜை செய்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.அதன் பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.தொடர்ந்து மூலவரான விநாயகர் ஐயப்ப சுவாமி கருப்பண்ணசாமிக்கு மகா அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்ப சாமி வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story