ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த புதூர் கிராமத்தில் ஶ்ரீ ஊத்துகாட்டு எல்லையம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை அமைத்து 500-க்கும் மேற்பட்ட கலசங்கள் வைத்து யாக பூஜைகள் செய்து இன்று மங்கள இசையுடன் யாத்திரை தான புறப்பாடு மற்றும் நான்கு கால யாகபூஜைகளுக்கு பின்னர் விமான கோபுரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர் பின்னர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது , மற்றும் , இரவு 8 மணி அளவில் அம்மனின் வீதிஉலா நடைபெற்றது..

Tags

Next Story