ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஆலய அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா!

புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஆலய அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா மிக விமர்சையாக நடைபெற்றது

புதுக்கோட்டை நகர பகுதியான மேல ராஜ வீதியில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஆலய அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா மிக விமர்சையாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர் புதுக்கோட்டை நகர பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது.

இந்த ஆலயத்தை 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டு இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காசி ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கும்பக்கரசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர் அதன் பிறகு பஞ்சமுக தீபாதாரணை காண்பிக்கப்பட்டது இந்த நிகழ்வில் புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் திமுக நகர செயலாளர் செந்தில், முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் புதுக்கோட்டை நகராட்சி வார்டு உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

இந்த கும்பாபிஷேக விழாவை விழா கமிட்டீனர் சிறப்பாக செய்த என்பது குறிப்பிடத்தக்கது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story