அழகுபார்வதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

அழகுபார்வதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
 கும்பாபிஷேகம் 
சுரண்டை அழகுபார்வதி அம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் பிரசித்தி பெற்ற 7 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அழகு பார்வதி அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலையில் அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேயங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது, இதில் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story