அருள்மிகு சென்றாயப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா

அருள்மிகு சென்றாயப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அருள்மிகு சென்றாயப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சேந்தமங்கலம் கீழ்பாகம் கிராமத்தில், மலைப்பட்டியில் எழுந்தருளி அருள் பாதித்து வரும் பூசலகுல குலதெய்வம், அருள்மிகு ஸ்ரீ சென்றாயப் பெருமாள் சுவாமி திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலையிலேயே சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, யாக வேள்வியில் யாகம் நடைபெற்றது. இந்த யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கோவில் குடிபாட்டுக்காரர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். கும்பாபிஷேக விழா நிறைவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story