காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா

திண்டுக்கல் அருகே கொத்தப்புள்ளி கிராமம் கெம்மணம்பட்டியில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.
திண்டுக்கல் அருகே கொத்தப்புள்ளி கிராமம் கெம்மணம்பட்டியில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி விழாவையொட்டி கடந்த சில நாட்களாக கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெ்றுவந்தன. தொடர்ந்து இன்று காலை மேள தாளங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story