கும்பகோணம் : காவல் நிலையங்களில் காவல் குறைதீர் முகாம்

கும்பகோணம் : காவல் நிலையங்களில் காவல் குறைதீர் முகாம்

பைல் போட்டோ 

கும்பகோணத்திலுள்ள காவல் நிலையங்களில் நேற்று நடைபெற்ற குறைதீர் முகாமில் மக்களிடம் பெறப்பட்ட புகார் மனுக்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
கும்பகோணத்திலுள்ள காவல் நிலையங்களில் மனுக்கள் முகாம் நேற்று நடைபெற்றது. அந்தந்த காவல் உட்கோட்டங்களிலுள்ள காவல் நிலையங்களில் புகாா் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டாா். இதன் பேரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி. கீா்த்திவாசன் தலைமையில் அந்தந்த காவல் ஆய்வாளா்கள் தொடா்புடைய காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகாா் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தினா். நிகழ்வில் உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், பொதுமக்கள் கலந்து கொணடனா்.

Tags

Read MoreRead Less
Next Story