கோவில் கும்பாபிஷேக விழா

போச்சம்பள்ளி அருகே புலியூரிலுள்ள முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.

போச்சம்பள்ளி அருகே புலியூர் கிராமத்தில் முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூர் கிராமத்தில் முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இன்று காலை அங்கு அமைக்கபட்டிருந்த யாக சாலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து ஹோமம், பூரணாதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் 10- மணிக்கு சிவாச்சாரியார்கள் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலை சுற்றி வந்து முனியப்பன் சுவாமி மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக நடைபெற்றது.

பின்னர் அங்கிருந்தவர்கள் மீது புனித நீர் தெளிக்கபட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்கார, ஆராதனைகள் பூஜைகள் செய்த பின் தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதல் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Tags

Next Story