சேவூர் அருகே நிலாச்சோறு படைத்து பெண்கள் கும்மியாட்டம்

சேவூர் அருகே நிலாச்சோறு படைத்து பெண்கள் கும்மியாட்டம்

கும்மியாட்டம்

அவிநாசி சேவூர் அருகே தைப்பூசத்தை முன்னிட்டு நிலாசோறு படைத்து பெண்கள் கும்மி ஆட்டம் ஆடினர்.

திருப்பூர் தைப்பூசத்தை முன்னிட்டு 9 நாட்கள் நிலாவுக்கு சோறு படைத்து சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்கள் கும்மியடித்து கொண்டாடும் நிகழ்ச்சி கொடியேற்ற நாளில் (கடந்த 19 -ம்தேதி) இருந்து கிராமங்களில் இன்றும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சேவூர் அருகே முறியாண்டம்பாளையம் காமராஜர் நகர், சந்தையபாளையம், உள்ளிட்ட பல கிராமங்களில், தைப்பூசத்தை முன்னிட்டு 9 நாட்கள் நிலாவுக்கு சோறு படைத்து சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்கள் கும்மியடித்து கொண்டாடும் நிகழ்ச்சி கொடியேற்ற நாளில் (கடந்த 19-ம் தேதி) இருந்து நடைபெற்று வருகிறது.

முதல் நாள் கொடியேற்றத்தன்று அவர் அவர்கள் வீடுகளிலிருந்து பழம் மற்றும் சர்க்கரை கொண்டு வந்து ஊரின் நடுவே உள்ள பொது இடத்தில் வண்ண வண்ண கலர்களில் கோலமிட்டு கோலத்தின் நடுவே சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து பிள்ளையாரின் தலையில் அருகம்புல், வெள்ளை ஏருக்கலாம் பூ வைத்து, அலங்கரித்து நவதானிய முளைப்பாரி வைக்கப்பட்டது.

பின்னர் தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்தங்களை படைத்து வழிபட்டனர். அதை தொடர்ந்து பிள்ளையாரை பாவித்து, நிலாவை பூமிக்கு அழைக்கும் விதமாக பெண்கள் வட்டமாக நின்று தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ஆடி, பாடி கும்மியடித்தனர். அப்போது அனைத்து நிலைகளிலும் இயற்கை, மக்களுக்கு சாதகமான ஒரு நிலையை கொண்டு வர வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.இதைத் தொடர்ந்து அனைவரும் பங்கிட்டு சாப்பிட்டு வந்தனர் இதையடுத்து, தேரோட்டத்திற்கு முந்தைய நாள், இரவு நிலாச்சோறு படைத்துவிட்டு, இரவு 9 மணிக்கு மேல் பொதுமக்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் பலர் அருகில் உள்ள மலைக்கோவில்களுக்கு பாதயாத்திரையாக சென்று தைப்பூசத்தன்று அதிகாலையில் முருகனை தரிசித்து வருவார்கள்.

இதை தொடர்ந்து (வரும் 25 -ம் தேதி) தைப்பூச தேரோட்டைத்தை முன்னிட்டு இரவு வண்ண வண்ண கலரில் பொது இடத்தில் தேரை வரைந்து வீடுகளிலிருந்து கடலை மாவால் செய்யப்பட்ட ஒப்பிட்டு மற்றும் பலகாரங்கள், பழவகைகளை நிலாவுக்கு படைத்து வழிபட்டு அனைவரும் கும்மியடித்தும்,

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பெளர்ணமி நிலாவெளிச்சத்தில் பல விளையாட்டுகளை விளையாடுவார்கள். நிறைவு நாளில் 27-ம்தேதியன்று அனைவரும் வீடுகளிலிருந்து (தேரோட்டம் அன்று சாப்பிட்ட மாவு, பலகாரங்ககள் ஜீரணம் ஆவதற்காக) வெல்ல வெங்காயத்தால் செய்யப்பட்ட பூண்டு ரசம் சாதம் கொண்டு வந்து நிலாவுக்கு படைத்து வழிபடுவர். பிறகு தினசரி சாணத்தால் செய்த பிள்ளையாரை கூடையில் எடுத்து கன்னிப்பெண்கள் தலையில் வைத்து ஊரை சுற்றி வந்து கிணற்றில் விட்டு சாமி கும்பிட்டு தைப்பூச திருநாளை சந்தோசமாகவும்,

குதூகலமாகவும், மன நிறைவுடன் நிறைவு செய்வர். அக்காலத்தில் செய்த ஒவ்வொரு செயலுக்கும் அறிவியலுக்கும் நமது உடல்நலத்திற்கும் பெரிதும் தொடர்பு இருக்கிறது எனவே நம் பாரம்பரிய உணவு முறை ஆகட்டும் உணவு சாப்பிடும் பழக்கம் ஆகட்டும் அழிந்துவிடாமல் கடைப்பிடித்து ஆரோக்கியமாக வாழ்வோம்.

இந்நிகழ்வு சேவூர் பகுதியில் பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் என அப்பகுதி பெரியோர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story