குப்பநத்தம் அரசு பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி!

குப்பநத்தம் அரசு பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி!

100 சதவீதம் தேர்ச்சி

குப்பநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் குப்பநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் 56 மாணவர்கள் தேர்வு எழுதி 56 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி அளவில் முதலிடம் பிடித்து மாணவி அஸ்வினி 467 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.

463 மதிப்பெண்களை பெற்று இனிதா என்ற மாணவி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 455 மதிப்பெண்கள் பெற்று முகுந்தன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

மாணவர்களை தமிழ் தலைமை ஆசிரியர் தமிழ் கனி மற்றும் இருபால் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags

Next Story