தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

குருத்தோலை ஞாயிறு

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வாரத்தை முன்னிட்டு இன்று குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் புனித வாரத்தை முன்னிட்டு குருத்தோலை ஞாயிறு பவனி திருச்சி தூய சகாய அன்னை ஆலயத்தில் குருத்துகள் மந்திரிக்கப்பட்டு பேரணி பங்குத்தந்தை ஜூடு முத்துச்செல்வன் தலைமையில் உதவி பங்கு தந்தை இம்மானுவேல் முன்னிலையில் பேரணியாக சென்று திருப்பலி நிறைவேற்றினர். அதேபோல் புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை பீட்டர் ஆரோக்கியதாஸ் தலைமையில் உதவி பங்குதந்தை எஸ்ரோன் ஆகியோர் குருத்துகள் மந்திரிக்கப்பட்டு பவனியாக பாடல்கள் பாடி ஆலயம் சென்று திருப்பலி நிறைவேற்றினர் குருத்தோலை பவனியில் அருட்சகோதரர்கள் அருட்சகோதரிகள் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் திரளாக கலந்து கொண்டனர் .

Tags

Next Story