கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயில் குத்துவிளக்கு பூஜை

கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயில் குத்துவிளக்கு பூஜை

குத்துவிளக்கு பூஜை

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம், கீழ்வேளூர் சுந்தரகுஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி கோயில் தை மாத 3 வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுந்தரகுஜாம்பிகை அம்மன் சன்னதியில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. குத்து விளக்கு பூஜையை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இரவு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது குத்து விளக்கு பூஜையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு பூஜை செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள், கிராமவாசிகள் செய்திருத்னர்.

Tags

Next Story