நாமக்கல்லில் தொழிலாளர் தினவிழா கொடியேற்றி கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளிகள் சங்கத்தின் சார்பில் மே தின விழா நடைபெற்றது.
நாமக்கல், சேந்தமங்கலம் சாலை, ரங்கர் சன்னதி வீதியில் உள்ள நாமக்கல் மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளிகள் சங்கத்தின் சார்பில் மே தின விழா கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது. சங்கத்தின் தலைவர் காளியண்ணன் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார், பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.செயலாளர் ஜெயராமன் மே தின சிறப்புகளை எடுத்துரைத்து பேசினார். சங்கத்தில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் காக்கி வேட்டி மற்றும் பச்சை துண்டு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நாமக்கல், கடைவீதியில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story