நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளி சத்தியாகிரக போராட்டம்

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளி சத்தியாகிரக போராட்டம்

கொல்லங்கோடு அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளி சத்தியாகிரக போராட்டம் செய்தார்.


கொல்லங்கோடு அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளி சத்தியாகிரக போராட்டம் செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட மாறாகுளத்தில் இருந்து மண்களை வெட்டி அதிக விலைக்கு கேரளாவுக்கு கடத்தி வருவதாக புகார்கள் உள்ளன. மண் எடுக்கப்பட்டதன் காரணமாக குளம் பாதாளமாகி குளிக்க செல்பவர்களுக்கு மரண பயம் ஏற்பட்டுள்ளது.

எனவே மண் எடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சசி தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தப் போராட்டம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story