தாராபுரம் அருகே ஆடு திருடிய தொழிலாளி கைது

தாராபுரம் அருகே ஆடு திருடிய தொழிலாளி கைது

ஆடு திருடியவர்

தாராபுரம் அருகே ஆட்யூரை சேர்ந்த விவசாயி கார்த்திக் என்பவர் ஆடுகள் திருடு போனதாக தாராபுரம் காவல்துறையில் புகார் கொடுத்ததை அடுத்து ஜெயராஜ் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

தாராபுரம் அருகே ஆட்சியூரரை சேர்ந்த விவசாயி கார்த்திக் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் ஆடுகளை பட்டியலில் இருந்து மேச்சலுக்காக அனுப்பி வைத்தார். மாலையில் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்துவிட்டு நேற்று காலையில் பட்டியை திறந்தார்.

அப்போது ஒரு ஆடு குறைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து ஆடு திருடியதாக பழனி தாலுக்கா பெருச்சிபாளையம் கலலுத்துறை பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் வயது 52 என்பவரை கைது செய்தனர்.

அவர் மீது ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்கில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story