வயிற்று வலியால் கூலி தொழிலாளி தற்கொலை

வயிற்று வலியால் கூலி தொழிலாளி தற்கொலை

தற்கொலை

திருச்சி மாவட்டம், கார்த்திகைப்பட்டியில் கடுமையான தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கூலித் தொழிலாளி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே கார்த்திகை பட்டியைச் சேர்ந்தவர் 42 வயது செல்வராஜ். இவர் விவசாய நிலங்களுக்கு மருந்து ஸ்பிரே செய்யும் வேலை செய்து வருகிறார். இதனால் அவருக்கு கடுமையான தொடர் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.தொடர் வயிற்று வலியால் மன உளைச்சல் அடைந்த செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பம் குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story