திண்டிவனத்தில் அரசு பஸ் மோதி தொழிலாளி சாவு

திண்டிவனத்தில் அரசு பஸ் மோதி தொழிலாளி சாவு

இறந்த தொழிலாளி

திண்டிவனத்தில் அரசு பஸ் மோதி தொழிலாளி இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நொளம் பூர், அயனாவரம், இருளர்பகு தியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 46). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மொபட்டில் திண்டிவனம் வந்துவிட்டு மீண் டும் மொபட்டில் நொளம்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.

திண்டிவனம் உதயநகர் பகுதி மெயின் ரோட்டில் வந்தபோது பின்னால் வந்த அரசு பஸ் வெங்கடேசன் ஓட்டிச்சென்ற மொபட்டின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்க டேசன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story