குளத்தில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி பலி !

குளத்தில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி பலி !

 வழக்கு பதிவு

திருமருகல் அருகே குளத்தில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை மால் திருமருகல் அருகே குளத்தில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி சாவு நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி ஹாஜரா பேகம் தெருவை சேர்ந்தவர் பாவாஷா ஜலாலுதீன் (வயது 58).கட்டிட கூலித்தொழிலாளி.

இவர் சம்பவத்தன்று ஏனங்குடி சத்திரம் குளத்தில் ஓரமாக உள்ள கட்டையில் அமர்ந்துள்ளார்.திடீரென மயக்கம் ஏற்பட்டு தலைகீழாக குளத்தின் உள் தவறி விழுந்துள்ளார்.

இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ஜலாலுதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் திருக்கண்ணபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பெயரில் திருக்கண்ணபுரம் போலீசார் ஜலாலுதீன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து ஜலாலுதீன் மனைவி செய்தூண்பீவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story