மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி

உயிரிழந்த துளசிமணி

சங்ககிரி அருகே கரும்பாலையில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி தோப்புக்காடு பகுதியை சேர்ந்த துளசிமணி என்பவர் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தண்ணீர்தாசனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அவரது உறவினர் கரும்பாலையில் கூலித் தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் கரும்பாலையில் கரும்புகளை இறக்கிக்கிக்கொண்டிருந்த போது மின்சார ஒயர் மீது கரும்பு மோதி எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கியதில் துளசி மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இத்தகவல் அறிந்து விரைந்து வந்த தேவூர் போலீசார் துளசி மணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரும்பலையில் கரும்புகளை இறக்கி கொண்டிருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story