பாம்பு கடித்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பாம்பு கடித்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

காவல் நிலையம்

அரூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி பாம்பு கடித்து உயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டம்,அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் கூலித்தொழிலாளி இவர் நேற்று வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது அவரை பாம்பு கடித்துள்ளது. இதனை அடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் வாகன மூலம் சிகிச்சைக்காக அரசு அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மேல் சிகிச்சை கொண்டு செல்லப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முருகன் இன்று உயிரிழந்தார். இது குறித்து அரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story