ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு
தொழிலாளி பலி 
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ரயில் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம்,நாகர்கோவில் ஆணைபாலம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று ஒருவர் சடலம் காணப்பட்டது. இது குறித்து அப்பகுதியினர் ரயில்வே போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் யார் என்பது குறித்து ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். விசாரணையில் இறந்தவர் நாகர்கோவில் இடலக்குடி பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் கணேசன் (30) என்பது தெரிய வந்தது.

வெல்டிங் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவரது தந்த இறந்து இரண்டு மாதம் தான் ஆகிறது. ஆணைபாலம் வழியாக தண்டவாளத்தில் நடந்து செல்லும் போது ரயில் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story