விழுப்புரம் அருகே ரயில் மோதி தொழிலாளி சாவு

விழுப்புரம் அருகே ரயில் மோதி தொழிலாளி சாவு

பலியான வாலிபர்

விழுப்புரம் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலியானார்.

விழுப்புரம் அருகே உள்ள ஆயந்தூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமிபதி மகன் அஜித்குமார் (வயது 25). தொழிலாளியான இவருக்கு சரிவர காது கேட்காது, இந்நிலையில் இவர் அதே கிராமத்தில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கிச்சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அஜித்குமார், அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story