சேலம்: கழிவறையில் மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

சேலம்: கழிவறையில் மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

கோப்பு படம்

சேலம் அரசு மருத்துவமனை கழிவறையில் தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60), கூலித்தொழிலாளி. அவருக்கு சிறுநீரகத்தில் கல் பாதிப்பு பிரச்சினை இருந்தது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக ஆறுமுகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று காலை ஆறுமுகம் அங்கிருந்த கழிவறைக்கு சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story