கூலி தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை

கூலி தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை

பைல் படம் 

வானூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வானூா் வட்டம், கரசானூா், தில்லை நகரைச் சோ்ந்தவா் ராமு மகன் முனியப்பன் (33). கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி கலைச்செல்வி தனது குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டாராம். இந்த நிலையில் முனியப்பன் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.இதுகுறித்த புகாரின் பேரில், வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story