சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம்

சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம்

சிக்னல் இல்லாத சாலை

புதுப்பேடு கூட்டுச்சாலையில் விபத்தை தடுக்க சிக்னல், இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை

புதுப்பேடு கூட்டுச்சாலையில் விபத்தை தடுக்க சிக்னல், இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்துார் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

இந்நிலையில், குன்றத்துார் அருகே, புதுப்பேடு பகுதியில் கூட்டுச்சாலை உள்ளது. படப்பை, தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள் புதுப்பேடு கூட்டுச்சாலையில் இணைந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. மேலும், புதுப்பேடு கூட்டுச்சாலை அருகே பேருந்து நிறுத்தம், தனியார் மண்டபம், பெட்ரோல் நிலையம், வணிக கடைகள் உள்ளன.

இந்நிலையில், இந்த சாலை சந்திப்பை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். குன்றத்துார் போலீசார்இரும்பு தடுப்புகள் வைத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தப்பட்டது. அதன்பின் இந்த தடுப்புக்களும் அகற்றப்பட்டு விட்டன. இதனால், வாகன ஓட்டிகள் தங்கள் இஷ்டம் போல் நுழைந்து செல்வதால் விபத்து ஏற்படுகிறது.

இந்த கூட்டுச்சாலை சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தானியாங்கி சிக்னல் அல்லது தடுப்புக்களை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story