பெண் தற்கொலை: போலீஸார் விசாரணை

பெண் தற்கொலை:  போலீஸார் விசாரணை
காவல் நிலையம் 
பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் மது சூதனன்(37). இவரது மனைவி செந்தில்குமாரி(37). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததை தாயார் கண்டித்தார்.

அதை மகள் பொருட்படுத்தாததால் மனமுடைந்த செந்தில்குமாரி உடலில் மண் எண்ணை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.. படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமாரி இறந் தார். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக் குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story