நாய்கள் கடித்து ஆட்டுக்குட்டிகள் பலி

நாய்கள் கடித்து  ஆட்டுக்குட்டிகள் பலி

உயிரிழந்த ஆட்டு குட்டிகள் 

கொடுவாய் சாய் ராம் நகர் பகுதியில் நாய்கள் கடித்ததில் 4 ஆட்டுக்குட்டிகள் பலியாகின.

காங்கேயம் அடுத்த கொடுவாய் சாய்ராம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வீட்டில் வளர்க்கப்படும் மற்றும் தெருக்களில் திரியும் நாய்களின் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எல்லப்பாளையம் புதூர் ஊராட்சி சாய்ராம் நகர் பொதுமக்கள் தங்களின் தோட்டத்தில் ஆடுகள் மற்றும் கோழிகளை வளர்த்து வருகின்றனர். தெரு நாய்கள் தோட்டத்தில் வளர்க்கக்கூடிய ஆடுகளை கடித்து கொள்வதும் இறையாக உண்பதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் 1000க்கும் மேற்பட்ட கோழிகளை நாய்கள் கடித்து குதறி உள்ளது. இதனை தொடர்ந்து நேற்று தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த நான்கு ஆட்டுக்குட்டிகளை நாய்கள் கடித்ததில் அவை பலியாகிது. அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது இந்த பகுதியில் குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் உள்ளது இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை நாய்கள் துரத்தி செல்வதால் அச்சம் ஏற்படுகின்றது.ஒரு சில நேரத்தில் நாய்கள் கடித்து விடுகின்றது இதனால் உடனடியாக ஊராட்சி நிர்வாகம் இங்கு உள்ள நாய்களை பிடித்து மாற்று இடத்தில் விட வேண்டும் என்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story