விளக்கு பூஜை

விளக்கு பூஜை

 சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரின் நினைவிடத்தில் விளக்கு பூஜை நடந்தது. 

சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரின் நினைவிடத்தில் விளக்கு பூஜை நடந்தது.
சிவகங்கை சீமையை‌ ஆண்ட இராணி ராணி வேலுநாச்சியார் நினைவிடம் சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள தெப்பக்குளத்தின் தென்கரையில் அமைந்துள்ளது . இந்த நினைவிடத்தில் அவரின் 227 -வது நினைவு நாள் விழா இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது . விழாவின் தொடக்கமாக ராணி வேலுநாச்சியார் அறக்கட்டளையின் நிர்வாகிகளும் அதனைத் தொடர்ந்து சிவகங்கை சமஸ்தானத்தின் ராணி மதுராந்தகிநாச்சியார், இளைய மன்னர் மகேஸ்துரை ஆகியோர் வேலு நாச்சியாரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் உட்பட அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்து தலைவர்கள் பொதுமக்கள் என ஏறாளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னதாக இராணி வேலுநாச்சியாரின் நினைவிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற விளக்குபூஜை நடைபெற்றது.

Tags

Next Story