நில உரிமையாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

நில உரிமையாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

 பனங்குடியில் சி.பி.சி.எல் நிறுவனத்தை கண்டித்து நில உரிமையாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

பனங்குடியில் சி.பி.சி.எல் நிறுவனத்தை கண்டித்து நில உரிமையாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் பனங்குடி சி.பி.சி.எல் நிறுவனத்தை கண்டித்து நில உரிமையாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர் நாகை மாவட்டம் நாகூர் அருகே பனங்குடி சிபிசிஎல் நில எடுப்பில் பாதிக்கப்பட்ட பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் கிராம நில உரிமையாளர்கள், சாகுபடிதாரர்கள், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு மத்திய நில எடுப்பு சட்டத்தின்படி வழங்க வேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீட்டுத் தொகையை 4 ஆண்டுகளாக வழங்காமல் இருந்து வருவதை உடனடியாக வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கிய பின்னரே சி.பி.சி.எல் நிறுவனம் நிலங்களை அளவீடு செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தொடங்க வேண்டும். மூன்று கிராமங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். இந்த நில எடுப்பினால் பாதிக்கப்பட்ட முட்டம், சிறுநங்கை கிராமங்களில் விவசாய கூலித் தொழிலாளர்களையும் கணக்கெடுத்து, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.பனங்குடி கிராமத்தில் சாகுபடிததாரர்கள், விவசாய கூலித் தொழிலாளர்களின் கணக்கெடுப்பில் திட்டமிட்டே ஊழல் செய்யும் பனங்குடி கிராம நிர்வாக அலுவலர் சித்ரா என்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுத்தி நில உரிமையாளர்கள், குத்தகைததார்கள், கூலி விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்டோர் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரப் போராட்டத்தை தொடங்கி ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து நில உரிமையாளர்கள் சக்திவேல், விஜய்ராஜ் உள்ளிட்டோர் கூறுகையில், சட்டப்படி நிலத்திற்கான இழப்பீடு கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. மாவட்ட நிர்வாகமும் கண்டுக்கொள்ளவில்லை. எல்லாம் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதாக தெரிகிறது. எனவே அரசின் செவிக்கு செல்லும் வகையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளோம் என்றனர்.

Tags

Next Story