கனமழையால் நிலச்சரிவு - கிராம சாலைகள் துண்டிப்பு

கனமழையால்  நிலச்சரிவு  -  கிராம சாலைகள் துண்டிப்பு

நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட சாலை 

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதியில் பெய்த கன மழை காரணமாக சோலூர்மட்டம் பகுதியில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுமார் 300 மீட்டர் அகலத்தில் சுமார் 25 ஏக்கர் தேயிலை தோட்டம் அடியோடு நிலச்சரிவால் அடித்து செல்லபட்டுள்ளது. இந்த பயங்கர நிலச்சரிவால் கரிக்கையூர், மெட்டுக்கல், பங்களபாடி, பொம்மன் எஸ்டேட் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சாலையும் அடித்து செல்லபட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

Tags

Next Story