மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
காஞ்சி தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம்,சித்தாமூரில், காஞ்சி தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் டைகர்குணா தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமைக் கழக பேச்சாளர்கள் அன்னியூர் சிவா, மங்கலம் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ் மொழிக்காக உயிரை தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் வீர செயல்களை எடுத்துரைத்தனர். மேலும் தமிழ் மொழியை காக்க திமுக தொடர்ந்து செய்து வரும் சாதனைகளையும், தமிழகத்தில் இந்தி தினிப்பு வரும்பொழுது எல்லாம் தமிழை காப்பது திமுக என புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்மாலிக், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் சரளாதனசேகர், சரண்ராஜ் உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story